"அஸார் மட்டும்தான் குற்றவாளியா?
துபாய்:
கிரிக்கெட் ஊழலில் சம்பந்தப்பட்ட அஸாரூதீன், மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் விளையாட ஆயுள்காலத் தடை விதித்தது சரியல்லஎன்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் தவுஸீப் அஹமது கருத்து தெரிவித்துள்ளார்.
துபாயில் கிரிக்கெட் பயிற்சி அளிப்பதற்காக வந்துள்ள அவர் அங்குள்ள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், இருவர் மட்டுமே போட்டியின் முடிவை மாற்றமுடியும் என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. அவ்வாறு முடியுமெனில், கிரிக்கெட் சூதாட்டத்தை யாராலும் ஒழிக்க முடியாது என்றார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் பற்றி கேட்டதற்குபாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய இளம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவேண்டியது அவசியம் என்கிறார்தவுஸீப்.
சொந்த மண்ணில் 4 டெஸ்ட் தொடர்களை இழந்துள்ள பாகிஸ்தான் அணி முன்னணி வீரர்களான வாசிம் அக்ரம், சயீத் அன்வர்,இன்ஸமாம் உல் ஹக் மற்றும்மோயின் கான் ஆகியோர் இல்லையெனில் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணி உள்ள நிலைக்கு மாறிவிடும் என்றும் அவர் கூறினார்.
1980-களில் இம்ரான் கான் கேப்டனாக இருந்தபோது, அணியின் முக்கியமான வீரராக இருந்தவர் தவுஸீப் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications