இலங்கை வீரர்கள் சுட்டு 2 மீனவர்கள் சாவு
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இரண்டு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாலும்,மேலும் மீன்பிடி படகில் இருந்த 3பேருக்கு குண்டு காயம் ஏற்பட்டதாலும் வேதாரண்யம் கடற்கரையில் பதட்டம் நிலவிவருகிறது. மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள்தான் துப்பாக்கி சூடுநடத்தியதாக கூறப்படுகிறது
சுட்டுக் கொல்லபட்ட வேதமலை (25) மற்றும் ஜெயந்தனின் (20) உடலைஅவர்களோடு மீன் பிடிக்கச் சென்ற 3 பேர் நாகப்பட்டினம் கடற்கரைக்கு கொண்டுவந்தனர். அவர்களும் துப்பாக்கி சூட்டில் காயமடைந்துள்ளனர்.
அந்த பகுதியில் பதட்டம் நிலவி வந்ததால் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்துவந்தனர்.
காயமடைந்த மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications