ஆண்டிப்பட்டியில் ஜெ. போட்டி? 155 பேர் மனு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி 155 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் திங்களன்று துவங்கிய வேட்பாளர் விண்ணப்ப படிவ விற்பனையின் போது ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடக் கோரிஅவரின் சார்பில் 155 பேர் பணம் செலுத்தி விண்ணப்பித்துள்ளனர்.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதா போட்டியிடக் கோரி மனுச் செய்துள்ள நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், சிவகங்கையில் தனக்கு சீட் கேட்டு மனுச் செய்துள்ளார்.
தாமரைக்கனி, எம்.எல்.ஏ உள்ளிட்ட பலர் கட்சியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.
தலைமை அலுவலகத்தில் மாவட்டவாரியாக விற்கப்பட்ட விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் ஜாதி, பண பலம், தேர்தலில் வெற்றி தோல்வி நிலவரம்உள்பட பல புள்ளி விவரங்களும் கேட்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications