தொழிலாளியை அடித்த போலீஸ்காரர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
தொழிலாளியை அடித்து உதைத்த போலீஸ் தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டார்.
கோவையை அடுத்த துடியலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (45), இவர் வேலையை முடித்து விட்டு மாங்கரை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துடியலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் சண்முகம் அவரை மிரட்டினார். அடித்து உதைத்துள்ளார்.இதனால் பலத்த காயமடைந்த ஆறுமுகம், கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் ஆறுமுகம் அளித்த புகாரின் அடிப்படையில் துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சண்முகம் கைதுசெய்யப்பட்டார். மேலும், சண்முகம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications