போப் பிரார்த்தனை
டெல்லி:
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் உயிரிழந்த ஆயிரக்கணக்கானோருக்காக கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தலைவர் இரண்டாம் போப் ஜான் பால் சிறப்புப் பிரார்த்தனை செய்தார்.
இந்தியாவிலுள்ள ஆர்ச் பிஷப் லோரன்ஸோ பால்டிசேரிக்கு, போப் ஆண்டவர் இரண்டாம் ஜான்பால் சார்பில்,அவரது கார்டினல் ஆங்கிலோ ஸோஸ்டானோ அனுப்பியுள்ள இரங்கல் செய்தியில், குஜராத்தில் ஏற்பட்டபூகம்பம் மிகவும் துயரமான சம்பவமாகும். இதற்காக நான் சிறப்புப் பிரார்த்தனை செய்வேன். உயிரிழந்தமக்களுக்காக நான் பரிதாபப்படுகிறேன்.
பூகம்பத்தில் தங்களது உறவினர்களைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம் ஆறுதல்கூற வேண்டும். இந்தப் பிரச்சனையிலிருந்து இந்தியா மீளவும், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்டபாதிப்பிலிருந்து விடுபடவும், துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் பெறவும் கடவுளிடம் நாம்அனைவரும் ஒன்றிணைந்து வேண்டுவோம் என்றார்.
முன்னதாக, உலக கத்தோலிக்க மக்கள் சார்பில் பூகம்ப நிவாரண நிதியாக இந்தியாவுக்கு ரூ 3 கோடிஅனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.