வாகன சேவை இலவசம்
டெல்லி:
கோயமுத்தூரைச் சேர்ந்த இந்திய போக்குவரத்துக் கழகம் இலவசமாக, நிவாரணப் பொருட்களை குஜராத்துக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்துள்ளது.
இந்திய போக்குவரத்துக் கழகத்தின் வாகனங்கள் மூலம் தனியார் மற்றும் அரசு, நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். மேலும் தனிப்பட்டமுறையிலும் பொதுமக்கள் தங்களது சார்பில் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம். ராஜஸ்தான், அகமதாபாத் மற்றும் மும்பை நகரங்களிலிருந்துஏற்கனவே நிவாரணப் பொருட்கள் இந்திய போக்குவரத்துக் கழக வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு விட்டன.
ராஜஸ்தானிலிருந்து 18 லாரிகளில் மருந்துப் பொருட்கள், துணிமணிகள், உணவுப்பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பூஜ்மற்றும் பச்சாவ், மோர்வ், கட்ச் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொல்கத்தா, மும்பை, நாக்பூர், வாரணாசி, ஹைதராபாத், சென்னை மற்றும் அகமதாபாத்திலிருந்து தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமான வாகனங்கள்மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் என்று இந்திய போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதிலுமுள்ள இந்திய போக்குவரத்துக் கழகத்தின் 56 கிளைகளில் ஊழியர்கள் 24 மணி நேரமும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களது ஒரு நாள் ஊதியத்தை குஜராத் மக்களுக்குக் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.