பூகம்பம் குறித்து வெப்தளம்
டெல்லி:
இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து பூகம்பம் குறித்த விவரங்களை அறியும் வகையில் www.gujaratrelief.com என்ற வெப்தளத்தை அமைக்க அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அகில இந்திய சிறுபான்மையினர் முன்னணி தலைவர் ஆசிப் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்டபூகம்பம் மிகவும் சோகமான சம்பவமாகும். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் தங்களால்இயன்ற உதவிகளைச் செய்யலாம்.
அகமதாபாத் நகரில் அரசு கன்ட்ரோல் அறையை அமைத்துள்ளது. நிவாரணப் பொருட்கள் வழங்குவது குறித்துஇந்தக் கன்ட்ரோல் அறையைத் தொடர்பு கொண்டு விவரங்கள் அறிந்து கொள்ளலாம். இங்கு மருந்துப்பொருட்கள், போர்வைகள், துணிமணிகள் ஆகியவற்றை அனுப்பலாம்.
குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் மிகப்பெரிய இயற்கைச் சீற்றமாகும். இந்த மிகப்பெரிய சோகத்திலிருந்தும்,இழப்பிலிருந்தும் குஜராத் மக்கள் மீண்டு எழ நாம் ஒவ்வொருவரும் உதவி செய்வது மிகவும் முக்கியமானதுஎன்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications