பூகம்பத்திற்குப் பின் பிரசவம்
அஞ்சார்:
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திற்கு அஞ்சார் என்ற நகரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், இடிபாடுகளிலிருந்துமீட்கப்பட்ட பெண்ணுக்குத் திங்கள்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.
அஞ்சார் கிராமத்தில் ராணுவ வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு கட்டிட இடிபாடுகளுக்கிடையில் நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிருககுப்போராடிக் கொண்டிருந்தார். அவரை ராணுவ வீரர்கள் பத்திரமாக மீட்டு வந்தனர்.
3 நாட்கள் மரண போராட்டத்துக்குப்பின் உயிரோடு மீட்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் இந்து ஜெயின் வயது 40. வெளியே வந்த சிறிது நேரத்தில்ஜெயினுக்கு ஆண்குழந்தை பிறந்தது.
உறவினர்கள் அந்த குழந்தைக்கு பாஜி என்று பெயர் வைத்தனர். இந்து ஜெயினை மீட்டதற்காக ராணுவ வீரர்களுக்கு அவர்கள் கண்ணீருடன் நன்றி கூறினர்.பூகம்பத்தால் பேரழிவு ஏற்பட்டு ஏராளமான உயிர்கள் பலியாகி உள்ள நிலையில் புதிதாக பிறந்த குழந்தை அனைவரையும் மகிழ வைத்தது.