For Quick Alerts
For Daily Alerts
Just In
100 மணி நேரத்திற்குப் பிறகு ..
லண்டன்:
பூகம்ப இடிபாடுகளிலிருந்து 100 மணி நேரத்திற்கு பின் இங்கிலாந்தைச் சேர்ந்த சர்வதேச மீட்புக் குழுவினரால் மாணவர் ஒருவர் மீட்கப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் பயிலும் வீரா தலால் என்ற மாணவர் பூகம்பம் பாதித்த பூஜ் பகுதியில் உள்ள அபார்ட்மெண்டில் தங்கிஇருந்தார்.
பூகம்பத்தில் அக்கட்டிடம் இடிந்து விழுந்ததால் அதில் சிக்கிக் கொண்ட அவரின் குரலைக் கேட்ட டிரைவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு சென்று அவரை மீட்டனர்.
மீட்புக் குழுவினர் முன்னதாக தேடியபோது யாரும் உயிருடன் இருப்பதற்கான சாத்தியமில்லை என்ற நிலையில் அம்மாணவர் பற்றிய தகவல் கிடைத்ததும்அவ்விடத்திற்குச் சென்று மீட்டனர். குஜராத் மீட்புப் பணிக்கு 70 மீட்பு வீரர்களை சர்வதேச மீட்பு படை அனுப்பியுள்ளது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]