ஸ்டார், ஈ.எஸ்.பி.என் ஒளிபரப்பு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பிப்ரவரி 1 ம் தேதி முதல் ஸ்டார் டி.வி. மற்றும் ஈ.எஸ்.பி.என். நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை என்று தமிழ்நாடுகேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கரூர் ஆறுமுகமும், துணைப் பொதுச் செயலாளர் ராஜேந்திர குமார் ஆகியோர்கூறுகையில், பே சானல் டீலர்களின் செயலால் சங்கத்தின் செயற்குழுவில் இவ்வாறு தீர்மானம்நிறைவேற்றப்பட்டுள்ளது.
பே சானல் டீலர்ஷிப்பை கேபிள் டி.வி. ஆபரேட்டர்களின் சங்கத்திற்கு தருமாறு கோரப்பட்டுள்ளது. கேபிள்டி.வி.ஆபரேட்டர்கள் பே சானலுக்குப் பயன்படுத்தும் டீ-கோடர்களை திருப்பி அளித்தவுடன் அதற்காகபெறப்பட்ட டெபாஸிட் தொகையை டீலர்கள் அவர்களிடம் திருப்பித்தர வேண்டும். அவ்வாறு திரும்பத்தராதடீலர்களின் மீது கிரிமினல் நடவடிககை எடுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications