குன்னூரில் மீண்டும் நில அதிர்ச்சி
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும்நில அதிர்ச்சி ஏற்பட்டது.
சென்ற வெள்ளிக்கிழமை இந்தியாவின் பல பகுதிகளில் பூகம்பம் ஏற்பட்டது. இதில்குஜராஜ் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கோவையில் நில அதிர்ச்சி எற்பட்டது. அதன் பிறகுவெள்ளிக்கிழமை குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பிறகு ஓரிரு நாட்களில்நீலகிரியின் சில பகுதிகளில் நில அதிர்ச்சி இருந்தது.
ஊட்டி, குன்னூர் பகுதிகளில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பெரும்அச்சமடைந்தனர். அந்த அச்சம் நீங்கும் முன்பே செவ்வாய்க்கிழமை மீண்டும்குன்னூரில் நில அதிர்வு ஏற்பட்டது.
செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வுகுன்னூர் மவுண்ட்ரோடு, ஹவுசிங், ஆழ்வார் பேட்டை. வண்ணாரபேட்டை,வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உணரப்பட்டது.
நில அதிர்வின் காரணமாக குன்னூர் கிரேசிங் பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்மானடெலிபோன் டவர் ஆடியது. இந்த நில நடுக்கத்தால் மக்கள் மேலும்அச்சமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications