தவறான ஊசியால் மாணவன் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அரசு பொது மருத்துவமனையில் தவறான ஊசி போடப்பட்டதால் 14 வயதுமாணவன் இறந்து போனதாகக் கூறப்பட்டுள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தில் வசித்து வரும் கோதண்டம் என்பவரின் மகன் லோகநாதன்.இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கு தொண்டையில் சதை வளர்ந்திருந்தது. இதற்காக சென்ற 27-ம் தேதி முதல்சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 28-ம் தேதிலோகநாதனுக்கு தொண்டையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
திங்கள்கிழமை இரவு அங்கு பணிபுரிந்து வந்த நர்ஸ் ஒருவர் லோகநாதனுக்கு வந்து ஊசிபோட்டு விட்டு சென்றார். அதன் பின் லோகநாதன் உடல்நிலை மோசமடைந்து அவர்இறந்து போனார்.
நர்ஸ் தவறான ஊசி போட்டதுதான் லோகநாதன் இறந்ததற்கு காரணம் என கோதன்டம்போலீசில் புகார் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications