பூகம்ப நிவாரணக் கமிஷன்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தேசிய இயற்கை சீற்ற நிவாரண கமிஷன் ஒன்றை உடனடியாக பிரதமர் வாஜ்பாய் அமைத்து குஜராத் பூகம்பத்திற்குஉதவ வேண்டும் என்று முன்னாள் பிரதமர் தேவ கெளடா புதன்கிழமை வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பெங்களூரில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒரிசாவில் புயல் ஏற்பட்ட போதே இயற்கைச் சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்குமாறு பிரதமரை வலியுறுத்தினேன். இப்போதும் அதேபோல் இயற்கை சீற்றநிவாரணக் கமிஷன் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ஆனால் யாரும் இதுபோல் நிவாரணக் கமிஷன் அமைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. இன்னமும்புயலால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு மறுவாழ்வு கிடைக்கவில்லை.

மத்தியிலுள்ள மூத்த அமைச்சர்கள், முக்கியப் பொறுப்புக்களில் இருப்பவர்கள் மற்றம் சுகாதாரத்துறை அதிகாரிகள்ஆகியோர் குஜராத் சென்று நிவாரணப்பணிகளை மேற்பார்வையிட வேண்டும். நிவாரணப்பணிகள் முடியும் வரைஅவர்கள் குஜராத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு உதவி செய்துவருவதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பிப்ரவரி 3 ம் தேதி குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறேன்.பிப்ரவரி மாதம் 2 ம் தேதி மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் சார்பில் பாதயாத்திரை நடத்தப்பட்டு குஜராத் பூகம்ப நிதிவசூல் செய்யப்படும். இந்தப் பணம் பிரதமர் நிவாரண உதவி அல்லது முதல்வர் நிவாரண உதவி திட்டத்தின் கீழ்குஜராத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் கெளடா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+