For Quick Alerts
For Daily Alerts
Just In
காஷ்மீரில் பி.எஸ்.எப். வீரர், 3 தீவிரவாதிகள் சாவு
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த வீரர், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செளரா என்ற இடத்தில், உள்ள எல்லைப் பாதுகாப்புப் படை முகாம் மீது தீவிரவாதிகள் கிரனேட் குண்டுகளைவீசினர். காலை 9.5 மணிக்கு இந்தத் தாக்குதல் நடந்தது. சம்பவத்தில் ஒரு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டார். மறைந்திருந்து இந்தத் தாக்குதலை தீவிரவாதிகள் மேற்கொண்டனர்.
இதற்கிடையே, சபாபோரா என்ற இடத்தில், பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் 3 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
யு.என்.ஐ.
Comments
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]