ஜெ.வை முதல்வராக்காமல் ஓயமாட்டேன் .. லத்தீப்
திருச்சி:
தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்ப்பதாக இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நடந்த கட்சியின் மாநாட்டில் பேசிய லத்தீப், சென்னை பனகல் பூங்கா கூட்டத்தில் அறிவித்தபடி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தமிழகத்தில்ஆட்சி மாற்றம் தேவை என்பதை சிறுபான்மை சமுதாயத்திடம் வலியுறுத்தி உள்ளேன்.
ஜெயலலிதா ஆட்சியில் லட்சுமிகடாட்சம் நிறைந்து இருந்ததாக வியாபாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே, மீண்டும் ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தும்எனது முயற்சிக்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் உதவ வேண்டும்.
மாநாட்டிற்குப் பின் மாற்றம் வரும் என வீரமணி கூறியுள்ளார். ஆனால், அதற்கு முன்பே மாற்றம் ஏற்பட்டுள்ளதை தமிழக சுற்றுப்பயணத்தின்போது கண்டேன்.
வாஜ்பாய், அத்வானி, ராமகோபாலன் ஆகியோருக்கு மகாபாரதக்கதையில் ஐவர் நூறு பேரை தோற்கடித்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன் எனஅவர் தெரிவித்தார்.