சிங்கத் தலையுடன் வந்தவர் ஹாங்காங்கில் கைது
Subscribe to Oneindia Tamil
ஹாங்காங்:
சுற்றுலா பயணி ஒருவரின் பெட்டியிலிருந்து இறந்து போன சிங்கம் ஒன்றின் தலைகண்டுபிடிக்கப்பட்டது.
தென்ஆப்பிரிக்காவிலிருந்து 47 வயது மதிக்கத்தக்க ஒருவர் சுற்றுலா சென்று திரும்பிவந்தார். சிங்கப்பூர் விமான நிலையத்திற்கு வந்த அவர் மீது விமான நிலையஅதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் கொண்டு வந்திருந்த பெட்டிகளை விமான நிலைய அதிகாரிகள்சோதனையிட்டனர். அப்போது அவரது பெட்டியில் இறந்த சிங்கத்தின்பதப்படுத்தப்பட்ட தலை, வால், உடல் பகுதிகள் போன்றவை இருந்தன.
இதுகுறித்து அந்த நபரை விசாரித்த போது இந்த சிங்கத்தை 4 ஆயிரம் அமெரிக்கடாலர்கள் கொடுத்து வாங்கியதாக கூறியுள்ளார். இவர் மீது இறக்குமதி விதிகளைமீறிய குற்றத்தின் பேரில் வழக்குத் தொடரலாமா என்பது குறித்து இப்போதுஆலோசனை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications