சென்னையில் கச்சேரி வழங்குகிறார் ரவிசங்கர்
சென்னை:
எம்.எஸ்.சுப்புலட்சுமி-சதாசவிம் இசை மற்றும் நடன கழகத்திற்கு (சமுத்ரி) நிதி சேர்ப்பதற்காக சென்னையில் சிறப்புஇசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர், அவரது மகள் அனுஷ்கா சங்கர் ஆகியோர் சென்னை மியூசிக் அகாதெமியில்இதற்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னையில் ரவிசங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில், எம்.எஸ்.ஸின் தீவிர ரசிகன் நான்.எனவேதான் இந்த நிகழ்ச்சிக்கு ஒத்துக் கொண்டேன் என்றார்.
சமுத்ரி அமைப்பின் இயக்குநர் டாக்டர் என்.பட்டாபி ராமன் கூறுகையில், இது ஒரு அரிய இசை நிகழ்ச்சி. 81வயதாகும் பண்டிட் ரவிசங்கரின் இசை நிகழ்ச்சி தென் மாநிலங்களில் நடப்பது மிகவும் அரிதானது. அதுவும்அவரது மகளுடன் சேர்ந்து இசை நிகழ்ச்சியில் கலந்து காள்வது மிகவும் அபூர்வமான நிகழ்ச்சி.
சர்வதேச அளவில் பிரபலமான ரவிசங்கரும், திறமை மிகுந்த அவரது மகளும் சேர்ந்து சென்னையில் முதன்முதலாக வழங்கும் இந்த நிகழ்ச்சி நிச்சயம் வரவேற்பைப் பெறும் என்றார்.
யு.என்.ஐ.