For Daily Alerts
Just In
சூடான் விபத்தில் 22 பேர் பலி
கார்ட்டூம் (சூடான்):
சூடான் தலைநகர் கார்ட்டூம் நகரில் பஸ் ஒன்று, பாலத்தில் மோதியதில், அதில் பயணம் செய்த 22 பேர் இறந்தனர்.
நைல் நதியில் உள்ள பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, பஸ் பாலத்தின் கைப்பிடிச் சுவரின் மீதுமோதியது. இதையடுத்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகள்அனைவரும், ஆற்றில் மூழ்கினர்.
மொத்தம் 27 பேர் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தனர். இவர்களில் 5 பேர் மட்டுமே உயிருடன்மீட்கப்பட்டனர். இறந்தவர்களில் 11 பேர் ஆண்கள், 7 பேர் பெண்கள், நான்கு பேர் குழந்தைகள்.
Story first published: Wednesday, January 31, 2001, 5:30 [IST]