நிதிக்கு ஏங்கும் நாகூர்-காரைக்கால் ரயில் பணி
சென்னை:
மத்திய அரசு நிதி ஒதுக்கியவுடன் நாகூர் - காரைக்கால் ரயில் பாதைக்கான பணிகள்தொடங்கும் என தென்னக ரயில்வே கூறியுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறைஅமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது தி.மு.க. எம்.எல்.ஏ.குத்தாலம் கல்யாணம், நாகூர்- காரைக்கால் இடையே புதிய ரயில் பாதை போடும் பணிதொடங்க இருப்பது பற்றி மாநில அரசுக்கு தெரியுமா? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் பொன்முடி தன் பதிலில் கூறியதாவது:
சென்ற 95-96-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே நிதிநிலை அறிக்கையில்திருச்சி - தஞ்சாவூர்- காரைக்கால் அகல ரயில்பாதை திட்டம் இணைக்கப்பட்டது.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நாகப்பட்டினம் முதல் காரைக்கால் வரை புதிய ரயில்பாதை அமைக்கப்படவிருக்கிறது. இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிதியை ரயில்வேவாரியம் ஒதுக்கிய பின் பணிகள் தொடங்கும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளதுஎன கூறினார்.












Click it and Unblock the Notifications