For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையிலிருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு சபாநாயகர் அனுமதி தராததைக் காரணம் காட்டி அ.தி.மு.க உறுப்பினர்கள் புதன்கிழமை சட்டசபையிலிருந்து வெளிநடப்புச்செய்தனர்.

சட்டசபையில் கேள்விநேரம் முடிந்ததும், அ.தி.மு.க சட்டசபைத் தலைவர் சுந்தரம் எழுந்து நின்று, தான் ஏற்கனவே கொடுத்திருந்த ஒத்திவைப்புத் தீர்மானம்என்னவாயிற்று என்று கேட்டார்.

அப்போது சபாநாயகர் பழனிவேல்ராஜன், ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து கேள்வி எழுப்புவதற்கு சுந்தரத்துக்கு உரிமை இல்லை. அவர் இதுகுறித்துக்கேட்க வேண்டுமானால் எனது அறையில் வந்து கேட்க வேண்டும். எப்போது வேண்டுமானாலும் எனது அறையில் வந்து கேள்வி எழுப்பலாம்என்றார்.

ஆனால் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாத சுந்தரம், தனக்குப் பேச அனுமதி தர வேண்டும் என்று கேட்டார். அப்போது சபாநாயகர், அ.தி.மு.கஉறுப்பினர் விஸ்வநாதன் கூறியுள்ள ஒத்திவைப்புத் தீர்மானம் குறித்து வெள்ளிக்கிழமை விவாதிக்கவிருப்பதால் இப்போது ஒத்திவைப்புத் தீர்மானத்துக்கு அனுமதிவழங்க முடியாது என்றார்.

இதை ஏற்காத சுந்தரம், தாமரைக்கனி உள்பட மூன்று அ.தி.மு.க.உறுப்பினர்களுடன் சபையை விட்டு வெளியேறினார்.

இதேபோல, மேலும் இடைக்கால பட்ஜெட் குறித்து நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அகில இந்திய பார்வர்டு பிளாக் உறுப்பினர் சந்தானம்,துணை சபாநாயகர் பரிதி இளம்வழுதி தனக்கு பேச அதிக நேரம் அளிக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி சட்ட சபையை விட்டு வெளியேறினார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X