சென்சஸ் பாதிப்பு
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தையடுத்து அங்குள்ள கட்ச், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் சுரேந்திரநகர்மாவட்டங்களில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டமாவட்டங்களைத் தவிர பிற 21 மாவட்டங்களில் பிப்ரவரி 9 ம் தேதி முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்புநடத்தப்படும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பு கமிஷனர் ஜே.கே.பான்தியா, மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பதிவாளர் மற்றும்மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அதிகாரிகளுடன் இந்த வாரத் தொடக்கத்தில் ஆலோசனை நடத்தினர்.
பூகம்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதுகுறித்து இன்னும் ஓரிரு நாட்களில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2 வதுகட்டமாக பிப்ரவரி 9 ம் தேதி தொடங்குகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல்கட்டப் பணி செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்தது. இரண்டாவது கட்டபணி பிப்ரவரி 28 ம் தேதிக்குள் முடிவடையும் என்று கூறப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications