4 உல்ஃபா தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி:
அஸ்ஸாமில், இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் நான்கு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ஐக்கிய அஸ்ஸாம் விடுதலை முன்னணி (உல்ஃபா) அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
தரங்க் மாவட்டம், உதல்குரி போலீஸ் நிலையத்திற்குட்பட்ட காக்ராபாரி என்ற பகுதியில், தீவிரவாதிகளுக்கும்,பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே நடந்த தாக்குதலில் 3 தீவிரவாதிகளும், ஒரு ராணுவ வீரரும் இறந்தனர்.
மற்றொரு சம்பவத்தில், சோனேஸ்வர் என்ற இடத்தில் ஒரு உல்ஃபா தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
தூம்தூம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட குடிபாரி என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் நடத்திய சோதனையில்தீவிரவாதிகளின் முகாம் கண்டறியப்பட்டது. அங்கிருந்து வெடிபொருட்கள், முக்கிய தஸ்தாவேஜுகள்கைப்பற்றப்பட்டன.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications