4 பேரைக் கொன்றவருக்கு 160 ஆண்டுகள் சிறை
பிலடெல்பியா (அமெரிக்கா):
சரக்கு ரயிலில் காரை மோத வைத்து காதலி உள்பட 4 பேரை கொன்றதற்காக 23 வயது கார்லஸ் ஏஞ்சல் டயஸ் சான்டியாகோ என்பவருக்கு 160ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பிலடெல்பியாவிலிருந்து வடமேற்கே 80 கி.மீ தொலைவில் உள்ள ரீடிங் என்ற ஊரில் தனது காதலி தன்னை கைவிட்டதற்காகசான்டியாகோ, காதலி வெர்ட்ஸ் சென்ற காரைத் துரத்திச் சென்றார்.
இதனால் வெர்ட்ஸ் அவசரஉதவி கோரியுள்ளார். ஓரிடத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்ததால் லெவல் கிராஸிங்கில்காத்திருந்த போது அவரைத் துரத்தி வந்த சான்டியாகோ வெர்ட்ஸ் காரின் பின்புறமாக தாக்கி சரக்கு ரயிலுடன்மோத வைத்துள்ளார்.
இதில் வெர்ட்ஸ், அவரின் 2வயது குழந்தை, வெர்ட்ஸின் நண்பர் ஜான் கோர்டே, ஸிந்தியா ஜேக்ஸ், ஜேக்ஸின்2வயது குழந்தை ஆகிய நால்வரும் மரணமடைந்தனர்.
இது குறித்து வெர்ட்ஸின் உறவினர்கள் கருத்து தெரிவித்த போது சான்டியாகோவின் நடத்தை பிடிக்காமல்வெர்ட்ஸ் அவரிடமிருந்து பிரிய முடிவு செய்து ஊரை விட்டுக் கிளம்ப முடிவு செய்திருந்தார் என்றனர்.
இக்கொலை குற்றத்திற்காக ஜூரிகள் முடிவு செய்த தண்டனை குறைவு என்ற இவ்வழக்கிற்கான நீதிபதி ஒவ்வொருகொலைக்காகவும் 40 ஆண்டுகள் வீதம் 160 ஆண்டுகள சிறைத்தண்டனை விதித்தார்.












Click it and Unblock the Notifications