For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குஜராத்திகளுக்கு சிறப்பு ரயில்

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வரும் மகா கும்ப மேளாவைக் காண வந்த குஜராத் மக்கள் மீண்டும் தங்களது சொந்த ஊர் செல்வதற்காகஅலகாபாத் - அகமதாபாத்திற்கு சிறப்பு ரயில் விட வடக்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.

இதுகுறித்து, வடக்கு ரயில்வே கூடுதல் மேலாளர் எஸ்.கே.லூத்ரா கூறுகையில், உத்தரப் பிரதேசத்தில் நடந்து வரும் கும்ப மேளாவைக் காண்பதற்காககுஜராத்திலிருந்து பக்தர்கள் இங்கு வந்துள்ளனர்.

பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தங்கள் மாநிலத்தையும், தங்கள் இருப்பிடத்தையும் காண்பதற்காக அவர்கள் மீண்டும் செல்வதற்கு வசதியாகஅலகாபாத்துக்கும், அகமதாபாத்துக்கும் இடையே சிறப்பு ரயிலை இயக்க வடக்கு ரயில்வே தீர்மானித்துள்ளது.

மேலும் பாட்னா - சூரத்துக்கு இடையேயும், வாரணாசி - அகமதாபாத்துக்கிடையே உள்ள ரயில் அலகாபாத் வழியேவும் திருப்பி விடப்பட்டுள்ளது.உத்தரப் பிரதேசத்தில் மகா கும்ப மேளாவைக் காண வந்த பக்தர்கள் மீண்டும் குஜராத் செல்வதற்காக சிறப்பு ரயில் விடத் தீர்மானித்துள்ளோம்என்றார்.

குஜராத்தைச் சேர்ந்த 8,000 பேர் உத்தரப் பிரதேசத்தில் மகா கும்ப மேளாவைக் காண வந்தவர்கள். அவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேசத்திலுள்ளகுஜராத் ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிலர் அலகாபாத் நகரில் உள்ள ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X