நான் எம்.ஜி.ஆரின் தொண்டன் .. சேடப்பட்டி
மதுரை:
அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு செல்லமாட்டேன் என்று முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா தெரிவித்துள்ளார்.
மதுரையை அடுத்த ஆண்டிபட்டியில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் நிருபர்களுடன் பேசிய அவர்:
நான் எம்.ஜி.ஆரின் தொண்டன், அதனால் அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு செல்லமாட்டேன். ஜெயலலிதாவுடன் தொடர்பு ஏதுமில்லை. எனினும்அ.தி.மு.க. பிரமுகர்கள் பலர் என்னிடம் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
இன்றைய கூட்டம் அரசியல்ரீதியாக முக்கியமானது அல்ல என்றாலும் வரும் 10-ம் தேதி மீண்டும் கூடி ஆலோசிப்போம்.
தமிழகத்தில் 3வது அணி அமைந்தால் தனிக்கட்சி ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கும் சக்தி த.மா.கா மற்றும் ம.தி.மு.க.கட்சிகளுக்கு உள்ளது என்றார்.
அவர் பேட்டியளித்த போது வடமலைக்குன்றின் முன்னாள் செயலாளர் வக்கீல் சுகுமாரன், மாணவர் அணி மாவட்ட இணைச்செயலாளர் வக்கீல் முருகன்ஆகியோர் உடனிருந்தனர்.