செவ்வாடை சேவை
லண்டன்:
500 க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டர்கள் சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்து கொண்டு போலீஸார் அனுமதியுடன், இந்த வார இறுதியில் லண்டனில்உள்ள கடைகளில் நிவாரண நிதி வசூல் செய்கின்றனர்.
லண்டனின் வடக்குப் பகுதியில் சுவாமி நாராயண் கோவில் பகுதியில் வசித்து வரும் தன்னார்வ தொண்டர்கள், கென்னிங்க்ஸ்டன் சாலை மற்றும் நைட்ஸ்பிரிட்ஜ்மற்றும் ஆக்ஸ்போர்டு சாலைகளில் உள்ள கடைகளில் பூகம்ப நிவாரண நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
சுவாமி நாராயணா கோவில் தலைமை பூஜாரி கூறுகையில், இந்து மத அமைப்புக்களில் உள்ள இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து லண்டனில் உள்ளகடைகளில் சிவப்பு நிறத் தலைப்பாகை அணிந்து கொண்டு நிதிவசூல் செய்வார்கள்.
மேலும் ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து ஆங்காங்கே ஒட்டி பூகம்ப நிவாரணத்திற்கு எப்படி உதவுவது என்பதை பொதுமக்களிடையேவிழிப்புணர்வு ஏற்படுத்ததி வருகிறோம். பொதுமக்கள் கொடுக்கும் ஒரு பிராங்க், ஒரு குழந்தையை ஒரு வாரம் வாழ வைக்கும். 2 பிராங்குகள் ஒருகுடும்பத்திலுள்ள 4 பேருக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்கும்.
நீங்கள் கொடுக்கும் 3 பிராங்குகளினால் ஒரு கம்பளி வாங்கலாம். பொதுமக்கள் கொடுக்கும் 500 பிராங்குகள் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஒருகுழந்தையை தத்து எடுத்து அதை ஒரு வருடம் வளர்ப்பதற்கு உதவும் என்று ஏற்கனவே விளம்பரப்படுத்தியுள்ளோம். வார இறுதியில் மஹா பூஜைகள்நடத்துவோம் என்றார் தாஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.