விடைபெற்றது 11-வது சட்டசபை
சென்னை:
தமிழகத்தின் 11-வது சட்டசபையின் கடைசிக் கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன்முடிவடைந்தது.
1996-ம் ஆண்டு ஜனவரி மாதம் 19-ம் தேதி தமிழகத்தின் 11-வது சட்டசபை ஆளுனர்உரையுடன் துவங்கியது. முதல்வராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
வெள்ளிக்கிழமை சட்டசபை சபாநாயகர் உணர்ச்சி பூர்வமான தனது பேச்சில் 11-வதுசட்டசபை கூட்டம் முடிவுக்கு வருகிறது எனவும், தற்போது வெற்றி பெற்ற அனைத்துஉறுப்பினர்களும் மீண்டும் வெற்றி பெற்று அடுத்த சட்டசபை கூட்டத்துக்கு வரவேண்டும் எனவும் வாழ்த்தினார்.
உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் வாழத்து தெரிவித்துக் கொண்டு விடை பெற்றுச்சென்றனர்.
இந்த கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் துங்கியது. ஆளுநர் நீதிபதி பாத்திமாபீவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குஜராத்தில்பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும்முதல்வர் சமர்பித்த இடைக்கால நிதிநிலை அறிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தேர்தல் நடந்து முடிந்த பின் வெற்றி பெறும் அணி அடுத்த சட்டசபையில் பதவிஏற்கும்.
யு.என்.ஐ.