தீவிரவாத அமைப்புகளை தடை செய்க .. மாநில அரசு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் தேசிய மீட்பு படை மற்றும் தமிழ் தேசிய விடுதலை ராணுவம் ஆகிய இரண்டுதமிழ் தீவிரவாத அமைப்புகளையும் தடை செய்யுமாறு தமிழக அரசு மத்திய அரசைகேட்டுக் கொண்டுள்ளது.

சட்டசபையில் இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துபேசுகையில் முதல்வர் கூறியதாவது:

பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில் ஈடுபட்ட இந்த இரண்டு தமிழ் தீவிரவாதஅமைப்புகளையும் தடை செய்யுமாறு சென்ற ஆண்டு 16-ம் தேதியிட்ட கடிதத்தில்மத்திய அரசிடம் மாநில அரசுகேட்டு கொண்டது.

மத்தி அரசு மேலும் சில விவரங்களை கேட்டுக் கொண்டது.அதுவும் ஜனவரி மாதம்ஒப்படைக்கப்பட்டது. தமிழக அரசு தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு சாதகமாகநடந்து கொள்வதாக எதிர்கட்சிகள் கூறுவது தவறானது.

இந்த இரு தமிழ் தீவிரவாத அமைப்புகளும் 1984-85 முதலே செயல்பட்டுவருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் தமிழ் தேசிய மீட்பு படையை சேர்ந்த 25பேரும் தமிழ் தேசிய விடுதலை ராணுவத்தை சேர்ந்த 141 பேரும் கைதுசெய்யப்பட்டனர் என கூறினார்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட பின் தமிழ் தீவிரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்என்ற கோரிக்கை வலியுறுத்துப்பட்டது.

ராாஜகுமார் விடுதலை செய்யப்பட்ட பின் நிருபர்கள் தமிழ் தீவிரவாத இயக்கங்கள்தடை செய்யப்படுமா என கேட்ட போது தேவைப்பட்டால் இந்த இயக்கங்களை தடைசெய்யுமாறு மத்திய அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும் என கூறியது நினைவுகூறத்தக்கது.

இந்த இரு தமிழ் தீவிரவாத அமைப்புகளும் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலில்சந்தன மர வீரப்பனுடன் இணைந்து செயல்பட்டனர்.

ராஜ்குமார் கடத்தப்பட்ட போது, ராஜ்குமாரை விடுதலை செய்ய தமிழக சிறையில்இருக்கும் 5 தமிழ் தீவிரவாதிகளை விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைவிடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+