என்ஜீனியர்கள் தலைமறைவு
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய கட்டிடங்கள், பூகம்பத்தால் இடிந்து விழுந்ததையடுத்து அகமதாபாத் மாநகராட்சி மற்றும் அகமதாபாத் நகர்ப்புறவளர்ச்சித் துறை கட்டிடக்கலை நிபுணர்கள் மற்றும் பிற அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தங்கள் மேல் வழக்குத் தொடரப்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் கட்டிடக்கலைத் நிபுணர்கள் தலைமறைவாகிவிட்டனர். தாங்கள் கட்டிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டதால், கட்டிட உரிமையாளர்கள் கோபமடைவார்கள், அவர்களிடமிருந்து பிரச்சனைகள்தோன்றலாம் என்ற அச்சத்தில் கட்டிடக்கலை நிபுணர்கள் தலைமறைவாகி விட்டனர்.
மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், செலவைக் குறைப்பதற்காக தரமற்ற கட்டிடங்களைக் கட்டிடக்கலை நிபுணர்கள் கட்டியுள்ளனர் என்றுபுகார்கள் வந்துள்ளன. இடிந்து கிடந்த கட்டிடங்களிலிருந்து மாதிரியாக சிலவற்றை எடுத்து, மேற்கொண்டு விசாரணை நடத்துவோம்.
அகமதாபாத்தில் 100 க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்து விட்டன. இன்னும் பல கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன.அகமதாபாத்தில் இடிந்து விழுந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை கட்டப்பட்டு 3 வருடங்களே ஆகின்றன.
தரமற்ற கட்டிடங்கள் மற்றும் வீடுகளைக் கட்டியது தொடர்பாக கட்டிடக்கலை நிபுணர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத்தொடரப்படும். அவர்களுக்கு குறைந்தது 10 வருட சிறைத்தண்டனை கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications