கனடாவில் நிதிவசூல்

Subscribe to Oneindia Tamil

டோரான்டோ:

கனடாவில் வாழும் பல்வேறு நாட்டவர்களும், இனத்தவர்களும் அங்கு வாழும் இந்தியர்களுடன் ஒன்றிணைந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்மக்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்கோர்போரோவிலுள்ள யீ காங்க் சீன ஆலோசனை மையத்தில் நடந்த பத்திரிக்கைக் கூட்டத்தில் சீன ஆலோசனை மைய தலைவர் ஜோசப் வோங்கூறுகையில், யீ காங்க் ஆலோசனை மைய ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்து 10, 000 கனடியன் டாலர்கள் வசூலித்துக் கொடுக்கத்திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆலோசனை மையத்தில் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், தெற்காசியர்கள், கிரீக் நாட்டவர், ஈரானிய இனத்தவர் ஆகியோர் உள்ளனர்.அவர்களிடம் நிதி வசூலிக்கத் தீர்மானித்துள்ளோம்.

மேலும் கனடாவில் வசித்து வரும் சீனர்கள் குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனடாசெஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இரண்டு பேர், 600 கனடிய டாலர்கள் மதிப்புள்ள காசோலையை குஜராத் நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர்.

வானொலி, தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் செய்து நிதி வசூல் செய்யும் பணி கனடாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது. கனடாவில் வாழும்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் 15 சதவீதம் கனடா நாட்டின் பல அத்தியாவசிய செலவுகளுக்காக வைத்துக் கொள்ளப்படும். மீதி பணம்இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில நிவாரணத்திற்கு அளிக்கப்படும் என்றார்.

கனடாவிலுள்ள சர்வதேச மகாவீர் ஜெயின் மிஷன் தலைவர் ஹரீஷ் ஜெயின் கூறுகையில், நாங்கள் வசூல் செய்யும் பணத்தை நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைப்போம் என்றார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+