நல்ல காலம் பிறக்குது.. தென் மாவட்டங்களுக்கு!
சென்னை:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரியில் சர்வதேச தரத்துடன் கூடிய உயர் தொழில்நுட்ப தொழிற்கூடப் பூங்கா ஒன்றிற்கான அடிக்கல் நாட்டுவிழாபிப்ரவரி 11ம்தேதி நடைபெறவுள்ளது என்று முதல்வர் சட்டசபையில் வெள்ளியன்று தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர்,இத்திட்டத்திற்காக திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் 2600 ஏக்கர் நிலம்கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு இப்பகுதியிலிருந்து ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக சிறப்புபொருளாதார மண்டலமாக (Special Economic Zone) இதனை அறிவித்துள்ளது.இதனால் இப்பகுதியில் அதிகளவில் முதலீடு செய்ய தொழில் நிறுவனங்கள் முன்வரும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீட்டாளர்களிடமிருந்து 8100 கோடி ரூபாய் வரை முதலீடு எதிர்பார்க்கப்படும்இத்திட்டம்அமெரிக்க தொழில்முனைவோர்கள் உதவியுடன் அமைக்கப்படும்.
இத்திட்டத்தினால் தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறுவதுடன் அப்பகுதியைச் சேர்ந்தபடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.டி.சி நிறுவனம் இதற்கான மாஸ்டர் பிளானைவடிவமைத்துள்ளது. தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்துடன் இணைந்து அமெரிக்கதொழில் முனைவோர்கள் இத்திட்டத்தினை இறுதி செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications