கொலை வழக்கில் இலங்கை அமைச்சர் கைது
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலின் போது நடைபெற்ற வன்முறையில் இருவர் கொல்லப்பட்டது தொடர்பாகஇலங்கை சுகாதாரத்துறை துணை அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு இலங்கை தேர்தலின் போது பயங்கர வன்முறை நடைபெற்றது. இதில் இருவர் கொல்லப்பட்டதுதொடர்பாக போலீசார் சரியான விசாரணை நடத்தவில்லை என்று இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கியதேசியக் கட்சி சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட துணைஅமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனைகைது செய்வதற்கு உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தெரிந்ததும் துணை அமைச்சர் கடந்தவாரம் கொழும்பில் தனியார்மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்ந்துவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications