For Daily Alerts
Just In
3-வது கூட்டணி .. என்ன சொல்கிறார் மூப்பனார்?
சென்னை:
சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரும்,பாண்டிச்சேரி முதல்வர் ப.சண்முகம் வியாழக்கிழமை சந்தித்துப பேசினர்.
சென்னை சத்தியமுர்த்தி பவனில் நடந்த இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம்நடந்தது. பேச்சு வார்த்தைக்கு பின் வெளியே வந்த மூப்பனாரிடம் 3-வது அணிகுறித்தும், சண்முகத்துடனான சந்திப்பு குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மூப்பனார், தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்துஇன்னும் எந்த விதமான முடிவும் எடுக்கப்படவில்லை, பாண்டிச்சேரி முதல்வருடன்தேர்தல் குறித்து எதுவும் பேசவில்லை. அவரது சந்திப்பு மரியாதை நிமித்தமானசந்திப்பு என்றார்.
முன்றாவது அணியில் சேருவது குறித்த கேள்விக்கும் மூப்பனார் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
Comments
Story first published: Friday, February 2, 2001, 5:30 [IST]