"வாஜ்பாய் வரும்போது குண்டு வெடிக்கும்

Subscribe to Oneindia Tamil

கோவை:

பிரதமர் வாஜ்பாய் கோவை வரும் பிப்ரவரி 16ம் தேதி கோவையில் பல இடங்களில் குண்டு வைத்து தகர்ப்போம் என தமிழக அமைச்சர் பொங்கலூர்பழனிச்சாமிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமியின் வீடு சிங்காநல்லூரில் உள்ளது. அவருக்கு வந்த கடிதத்தில்கூறியுள்ளதாவது:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற 5 தீவிரவாதிகள் கோவைக்கு வந்துள்ளனர். ராக்கெட் வெடிகள், ரிமோட்கண்ட்ரோல் பாம், ஏரியல் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியுள்ளனர். 756 ஜெலட்டின் குச்சிளும் இவற்றில் அடங்கும்.

வாஜ்பாய் வருகைக்கு முன்பாக பிப்ரவரி 14 அல்லது 16ம் தேதியில் முக்கியப் பிரமுகர்களைக் கொல்லும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த முறைகுண்டு வெடிக்கும் என்று எச்சரிக்கை அளித்தும் அலட்சியாக இருந்ததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

இதே போன்று அலட்சியப்படுத்தினால், பலர் உயிரிழப்பர். மத்திய சிறை, மருத்துவமனை, விழா மேடை, ரயில்நிலையம் உட்பட 21 இடங்களில் இந்தக்குண்டு வெடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+