பாண்டி.யில் அமைகிறது மெடிகல் பூத்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் கழகத்தை நடத்தி வரும் மெட்ராஸ் மெடிகல் மிஷன்(எம்.எம்.எம்.) எம்.ஆர்.எப். நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ பூத் அமைக்கஇருக்கிறது.
பாண்டிச்சேரியின் சுகாதாரத் துறையும்,எம்.எம்.எம். அமைப்பும் இணைந்து ஏற்பாடுசெய்திருந்த இருதய சிகிச்சை மருத்துவ முகாமை துவக்கி வைத்து பாண்டி.யின்சுகாதாரத் துறை அமைச்சர் வல்சராஜ் கூறுகையில், பாண்டிச்சேரியின் கிழக்கு கடற்கரைபகுதி அதிக விபத்து நடக்க வாய்புள்ள பகுதியாக கருதப்படுகிறது.
இந்த பகுதியில் விபத்து நடந்தவுடன் காயமடைந்தவர்களுக்கு உடனடி முதலுதவிஅளித்து அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கஎம்எம்எம் துவக்கவிருக்கும் பூத் உபயோகமாக இருக்கும்.
மருத்துவ கல்லூரிகள் தனியாரால் நடத்தப்படுகிறதா அல்லது அரசால்நடத்தப்படுகிறதா என்பது முக்கியமில்லை. அவை சரிவர செயல்படுகிறதாஎன்பதுதான் முக்கியம்.
பாண்டிச்சேரியில் பல விதமான மருத்துவ வசதிகளும் உள்ளன. விரைவில்பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரும்நியமிக்கப்பட உள்ளார் என கூறினார்.
முதன்மைச் செயலாளர் ஜோசப் பேசுகையில், பல சிறந்த மருத்துவ சேவைகள்ஆற்றப்பட்டாலும் பாணடியில் இருதய அறுவை சிகிச்சை நிபுணர்களும், நரம்பியல்அறுவை சிகிச்சை நிபுணர்கள் இல்லாததும் ஒரு குறையாகவே இருந்து வருகிறது.பாண்டிச்சேரி மருத்துவ அமைப்பும், எம்எம்எம் அமைப்பும் வந்த பிறகு பாண்டிச்சேரிமருத்துவ துறையில் சிறந்து விளங்கிறது என்றார்.
எம்எம்எம்-ன் இயக்குனர் டாக்டர் செரியன் பேசுகையில் , எம்எம்எம் முதல்வரின்இருதய சிகிச்சை நிதிக்காக இதுவரை ரூ 15 லட்சம் கொடுத்துள்ளது. 10.000-க்கும்அதிகமானவர்கள் இருதய நோய் சிகிச்சைக்க பரிசோதிக்கப்பட்டனர். அவர்களில் 550பேருக்கு இலவசமாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருக்கிறது என்றார்.
மருத்துவ சேவை நிறுவன இயக்குனர் டாக்டர் தம்மண்ண ராவ் பேசுகையில்,பாண்டிச்சேரி மருத்துவமனையில் வெளியிலிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளின்எண்ணிக்கை 44 லட்சத்திலிருந்து 56 லட்சமாக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.08லட்சத்திலிருந்து 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications