For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆபத்தில் 19,000 கட்டிடங்கள்

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:

குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் வணிகத் தலைநகரான மும்பை அரசு வட்டாரத்தில் நடத்திய ஆய்வில் 19,000 கட்டிடங்கள்பாதுகாப்பற்றதாக உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர்.

இவற்றைப் பாதுகாப்பதற்கும், அபாயம் உள்ள கட்டிடங்களை இடித்து சரி செய்யுமாறும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது என்றனர்.

மகராஷ்டிர முன்னாள் முதல்வர் சரத் பவார் கூறுகையில், அபாய நிலையில் இருக்கும் கட்டிடங்களை சீரமைப்பதில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்றுகூறியுள்ளார்.

முன்னதாக, 1993 ம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள லாத்தூர் என்ற நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதற்குப்பின் தற்போது, குஜராத் மாநிலத்தில்ஏற்பட்ட பூகம்பத்தால் மும்பையிலும் பூகம்பம் ஏற்படும் அபாயம் உள்ளது. கடந்த வாரம் மும்பை வாடாலாவில் உள்ள தீயணைப்பு நிலையத்தில்ஏற்பட்ட நிலநடுக்கத்தில் லேசான விரிசல் ஏற்பட்டது நினைவிருக்கலாம்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X