சொந்த ஊரில் அத்வானி..
Subscribe to Oneindia Tamil
குஜராத்:
பூகம்பம் பாதித்த பகுதிகளை பார்வையிட இரண்டாம் முறை குஜராத் சென்ற மத்திய உள்துறை மந்திரி அத்வானி தனது சொந்த ஊரான ஆதிப்பூருக்கு விஜயம்செய்தார்.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தை பூர்விகமாகக் கொண்ட அத்வானியின் குடும்பம் இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது குடியேறிய ஊர் குஜராத்மாநிலம் கட்ச் பகுதியில் உள்ள ஆதிப்பூர் ஆகும்.
1985 வரை தனது தந்தை வாழ்ந்த ஆதிப்பூரில் தந்தையின் நண்பர்களைச் சந்தித்த அத்வானியிடம் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு பனியிலும், வெயிலிலும்வெட்டவெளியில் வாடும் மக்கள் தங்களுக்கு தங்க இடம் கேட்டனர்.
இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்கும்படி குஜராத் முதல்வருக்கு அத்வானி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications