மனைவி மரணம்.. கணவர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலத்தில், மனைவி இறந்த சோகம் தாங்காத கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சேலத்தின் குமாரசாமிபட்டி அங்காளம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர்கண்ணன். இவரது மனைவி தேவி (25). இவர்கள் இருவரும் அன்னியோன்யமாககுடும்பம் நடத்தி வந்தனர். ஒருவர் மீது ஒருவர் அளவு கடந்த பாசம் கொண்டிருந்தனர்.
இந்நிலையில் தேவி சில தினங்களுக்கு முன் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது தீப்பிடித்து இறந்து போனார். மனைவியின் பிரிவை தாங்க முடியாமல்சோகத்தில் மூழ்கினார் கண்ணன். சோகத்தின் உச்சத்திற்கு சென்ற அவர்வெள்ளிக்கிழமை தன் மனைவியின் புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அஸ்தம்பட்டி இன்ஸ்பெக்டர் இது குறித்து விசாரித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications