முதல்வர் பதவி தப்புமா?
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளை சரிவர செயல்படுத்தாததால் கேசுபாய் பட்டேலின் முதல்வர் பதவி ஆட்டம் காண்கிறது.
குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சிக்கு படுதோல்வி ஏற்பட்டதால் பதவி நீக்கம் செய்யப்படலாம் என்ற நிலையில் குஜராத்தில்கடும் பூகம்பம் ஏற்பட்டு அவர் பதவியைக் காப்பாற்றியது.
ஆனால், பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை குறைவாக கூறியது மற்றும் நிவாரணப் பணிகள் மந்தகதியில் நடைபெறுவது போன்றகாரணங்களால் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், நிருபர்களிடம் பேசிய பாரதீய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணன், ராணுவ அமைச்சர், ஹெலிகாப்டர் மூலம் நடத்திய சர்வே மூலம்கிடைத்த தகவலை வைத்து உயிரிழப்பை மதிப்பிட்டிருக்கலாம்.
ஆனால், அரசு அலுவலர்கள் பூகம்பம் பாதித்த கிராமங்களில் சர்வே செய்து உயிரிழப்பு எண்ணிக்கை குறித்து தெரிவித்த பின்பே உண்மையான எண்ணிக்கைதெரிய வரும்.
பூகம்ப நிவாரணப்பணிகளில் மாநில அரசின் செயல்பாடு திருப்தியாக உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications