முறைகேடாக கனடாவில் குடியேறிய பங்களாதேஷிகள்
டொரோண்டோ:
கனடாவிற்குள் நுழையும் ஆசையில் தவறான வழியை கடைப்பிடித்த 1000 பங்களாதேஷிகளின் நிலை தற்போது கனடாவில் கேள்விக்குறியாகியுள்ளது.
நான்காண்டுகளாக நடைபெற்ற ரகசிய விசாரணையின் அறிக்கை புராஜக்ட் கேட்மியம் என்ற பெயரில் கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துபேசிய அந்நாட்டு அரசு தலைமை வக்கீல் லாரன்ஸ் மெக்காலே, தவறான வழியில் பெற்ற குடியேற்ற அனுமதி மூலம் ஆயிரத்திற்கும்மேற்பட்டோர் கனடாவில் குடியேறி உள்ளதாக தெரிவித்தார்.
மாண்ட்ரீலைச் சேர்ந்த அப்துல் மோஸித் செளத்ரி என்பவர் 14பேரை கனடாவிற்கு கடத்தி வரும்போது பிடிபட்டு மூன்று வருட சிறைத்தண்டனைவிதிக்கப்பட்டார்.
முன்னதாக 5 பங்களாதேஷிகளை கனடாவிற்கு கடத்தி வரும் முயற்சியை இந்திய அதிகாரிகள் முறியடித்திருந்தனர்.
கனடா போலீசார் விசாரித்து வந்த இவ்விஷயம் குறித்து தனக்கு தெரியாது என்று கனடாவின் குடியேற்றத்துறை அமைச்சர் எலினர் கேப்லன்தெரிவித்தார்.
உண்மையான தகவல்களின் அடிப்படையில் மட்டுமே அகதிகளாக குடியேற அனுமதி அளிக்கப்படுகிறது. தவறான தகவல்கள் மூலம் குடியேற்றம்பெற்றிருப்போர் வெளியேற்றப்படுவர் என்று குடியேற்றத்துறையின் பேச்சாளர் லோர்னா டெஸியர் தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்.