பில்லியர்ட்ஸிலும் மேட்ச் பிக்ஸிங்
மும்பை:
கிரிக்கெட்டை தாக்கிய மேட்ச் பிக்சிங் புயல் பில்லியர்ட்ஸையும் விட்டு வைக்கவில்லை.
இதுபற்றிய தகவல் லண்டன் அப்சர்வர் பத்திரிக்கைக்கு இங்கிலாந்து பில்லியர்ட்ஸ் ஆட்டக்காரர் கில்கிறைஸ்ட் அளித்த பேட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன் பட்ட போட்டியின்போது இங்கிலாந்தின் கில்கிறைஸ்ட், முகேஸ் ரேகானி என்ற இந்தியஆட்டக்காரருக்குச் சாதகமாக போட்டியில் விளையாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.
அதற்காக பணம் தருவதாக அப்போட்டியை நடத்திய ரேடியன்ட் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட்டின் ஆஷிம் ஷேத்ரபால் கூறியுள்ளார்.
நியூஸிலாந்திற்கு எதிரான போட்டியின் போது இங்கிலாந்தின் முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் கிறிஸ் லூயிஸிற்கு 3 லட்சம் பவுண்டுகள் அளிக்கமுன்வந்துள்ளார் ஷேத்ரபால்.
அது தொடர்பாக ஸ்காட்லாந்து யார்டும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் அவரை விசாரித்து வருகின்றன.
கிரிக்கெட் ஊழலில் தனக்கு தொடர்பில்லை எனக் கூறிய ஷேத்ரபால் அது பற்றி வழக்கு தொடரப் போவதாகவும் கூறியிருந்தார்.
யு.என்.ஐ