For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிரடிப்படை மோதலில் வீரப்பனும் ஈடுபட்டான்

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக-கேரள எல்லையிலுள்ள காட்டுப் பகுதியில் வீரப்பன் கும்பலுடன், தமிழக அதிரடிப்படை போலீஸார்நடத்திய தாக்குதலின்போது வீரப்பனும் அங்கு இருந்திருக்கிறான்.

தமிழக, கேரள காட்டுப் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த இந்தத் தாக்குதல் குறித்து தமிழக டி.ஜி.பி.ராஜகோபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தின் கோவை மற்றும் கேரளத்தின் பாலக்காடுமாவட்டத்தின் எல்லையில், உள்ள வாலையாறு என்ற பகுதியில் உள்ள செம்மந்திக்காடு என்ற காட்டுப் பகுதியில்இந்த மோதல் நடந்தது.

வெள்ளிக்கிழமை பிற்பகல்வாக்கில் இந்த மோதல் நடந்தது. முதலில், வீரப்பன் கும்பலைச் சேர்ந்த ஒருவன்,அதிரடிப்படை வீரர்கள் அந்தப் பகுதியில் நடமாடுவதைப் பார்த்து விட்டு, தனது கூட்டாளிகளைஉஷார்படுத்தியுள்ளான். பின்னர் தமிழக அதிரடிப்படை போலீஸார் மீது அவன் சுட்டுள்ளான். போலீஸார்பதிலுக்குச் சுட்டனர். இதை சமாளிக்க முடியாத கும்பல் தங்கள் வசம் வைத்திருந்த பொருட்களை விட்டு விட்டு,காட்டுக்குள் சிதறி ஓடியது.

போலீஸாரை நோக்கிச் சுட்டது சந்திரே கெளடா என்பது தெரிய வந்துள்ளது. வீரப்பன் கும்பல் விட்டுச் சென்றதோள்பைகளில், கேமரா, வாக்மேன், மைக்ரோ கேசட்டுகள், புளியோதரை உணவு பாக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் ஆகியவை இருந்தன. எந்த நோய்க்கு எந்த மருந்து சாப்பிட வேண்டும் என்ற பட்டியலும் அதில்இருந்தது.

கும்பல் தப்பி ஓடும்போது தூரத்தில், வீரப்பன் ஓடியதையும் எங்களது போலீஸார் பார்த்துள்ளனர்.

விரைவில் வீரப்பனைப் பிடித்து விடுவோம். இப்பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளது என்றார்ராஜகோபாலன்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X