ஒரு பக்கம் வெள்ளம் .. மறுபக்கம் தீ .. இன்னொரு பக்கம் நிலச்சரிவு
அடிலெய்ட்:
ஒரு பக்கம் கடும் மழையால் நிலச்சரிவும் வெள்ளமும் ஏற்பட்டுள்ள நிலையில் மற்றொரு பக்கம் ஏற்பட்ட தீயை அணைக்க தீயணைப்பு படையினர்கடுமையாக போராடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் தென்பகுதியில் உள்ள துல்கா என்ற சுற்றுலாத்தளத்திற்கு அருகில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் மற்றும் குடியிருப்புகள் பலஅழிந்தன.
200 பேருக்கு மேற்பட்ட தீயணைப்பு படையினர் அருகிலுள்ள போர்ட் லிங்கன் துறைமுக சுற்றுலாத்தளத்திற்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில்ஈடுபட்டுள்ளனர்.
இச்சுற்றுலா நகரை புகை மண்டலம் சூழ்ந்துள்ளதாலும் தீ விபத்து நடந்த இடத்திற்கு மிக அருகில் இருப்பதாலும் விரைவில் இங்கும் தீ பரவலாம் என்றுகருதிய நகர மக்கள் பலர் நகரை விட்டு வெளியேறினர்.
தென் கிழக்கு குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடும்மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பிரிஸ்பேன் நகருக்கு மேற்கே சாலைகளில் பாறைகள் விழுந்துபோக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளநீரால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள லிஸ்மோர் நகர மக்கள் வெளியேற்றப்பட்டனர். மற்றொரு நதியில்கரை உடைப்பெடுக்கக்கூடும் என்பதால் கிராப்டன் நகரில் உள்ள 30 குடும்பங்களும் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications