For Quick Alerts
For Daily Alerts
Just In
ஷார்ஜா போட்டிக்குத் தடை
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரண நிதிக்காக இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெற இருப்பதாக கூறப்பட்ட கிரிக்கெட்தொடருக்கு இந்திய அரசு அனுமதி எதுவும் தரவில்லை என்று அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக ஷார்ஜாவில் ஆசிய கிரிக்கெட் அமைப்பு பிப்ரவரி 8 முதல் 11 வரை இப்போட்டிகளை நடத்த இருப்பதாக செய்திநிறுவனங்கள் தெரிவித்திருந்தன.
இத்தொடருக்கான அனுமதி கோரப்பட்டதா என்பது பற்றிய தகவல்கள் இல்லை. இதற்கிடையே, சென்னையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியமத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உமா பாரதி பேசுகையில், ஷார்ஜாவில் நடக்கவுள்ள நிவாரண நிதிப் போட்டிக்கு அரசுஅனுமதி தரவில்லை என்றார்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Saturday, February 3, 2001, 5:30 [IST]