கருணாநிதி, ராமதாஸ் மீது தீவிரவாதிகள் குறி?
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
தமிழக முதல்வர் கருணாநிதி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர். ராமதாஸ் ஆகியோர் புதுவை வரும்போது அவர்களை தாக்கதீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய புதுவை முன்னாள் முதல்வரும் தி.மு.க.வின் புதுவை அமைப்பாளருமான ஜானகிராமன்,
போலீசாரை கத்தியால் குத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாத கும்பலைச் சேர்ந்த நபர் பற்றிய தகவல்களை புதுவை அரசு மறைப்பதாககுற்றம் சாட்டினர்.
புதுவையில் தீவிரவாதம் வளர்வதற்கு காரணம் தற்போதைய புதுவை அரசும் காங்கிரஸும் தான் என்ற அவர் புதுவைக்கு வரும் தமிழகத்தலைவர்கள்இருவருக்கும் தேவையான பாதுகாப்பு தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications