திமுக இருக்குமிடம் தெரியாமல் ஓடிப் போகும் ..ஜெ.
சென்னை:
தமிழகம் முழுவதிலும் அதிமுக ஆதரவு அலை வீசி வருகிறது. வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியிலிருந்துஅகற்றப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சனிக்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கூட்டணிக் கட்சிகளுடன் விரைவில்தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளேன்.
மாநிலம் முழுவதிலும் அதிமுக அலை வீசி வருவதை உணர்கிறேன். அதிமுக தொண்டர்களிடமிருந்து எனக்குவரும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, எங்கள் கட்சிக்கு நல்ல ஆதரவு இருந்து வருவதாக தெரிகிறது.சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு திமுக இருக்குமிடம் தெரியாமல் ஓடிப் போகும்.
தமிழ்த் தீவிரவாதிகள் அமைப்புகளைத் தடை செய்வது தொடர்பாக மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அரசுதெரிவித்துள்ளது. அப்படிச் செய்திருந்தால் அதை ஏன் முன்பே செய்யவில்லை.? இதில் ஏதோ உள்நோக்கம்இருப்பதாக உணர்கிறேன் என்றார் அவர்.
யு.என்.ஐ.