For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காதலுக்காக ஒரு உண்ணாவிரதம்

By Staff
Google Oneindia Tamil News

திருவொற்றியூர்:

காதலனைத் திருமணம் செய்து கொள்ள காவல் நிலையம் முன் சாகும்வரைஉண்ணாவிரதம் இருந்த பெண் கைது செய்யப்பட்டார்.

சென்னைக்கு அருகே இருக்கும் மணலி புதுநகர் வெள்ளக்குளம் கிராமத்தைச்சேர்ந்தவர் தேவி (19). இவர் அதே ஊரில் வசித்து வரும் பிரபாகரன் (24) என்பவரைகாதலித்து வந்தார். இந்த காதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது.

இந்நிலையில் பிரபாகரன் இந்த மாதம் தேவியை கைவிட்டு விட்டு வேறொருபெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். இதை எதிர்த்து பிரபாகரனைதனக்கு திருமணம் செய்து வைக்க கோரி வியாழக்கிழமை முதல் புதுநகர் காவல்நிலையம் முன் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

போலீசார் பிரபாகரனை கைது செய்த பின்னும் தனக்கு காவல் நிலையத்திலேயேதிருமணம் செய்து வைக்குமாறு தேவி உண்ணாவிரத்தை தொடர்ந்தார். இதனால்போலீசார் தேவியையும், அவருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர் உள்ளிட்ட 50பேரையும் கைது செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X