பயிரைக் காக்க யானையின் உயிரைப் பறித்தவர்கள்
Subscribe to Oneindia Tamil
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருகே போளூரில் மின்சார வேலியில் சிக்கிய காட்டு யானை ஒன்று உயிரிழந்தது.
இப்பகுதிகளில் காட்டு யானைகள் இரவு நேரங்களில் வயல்வெளிகளில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. யானைகளை விரட்ட விவசாயிகள் வயலைச்சுற்றி முள்வேலி அமைத்து திருட்டுத்தனமாக மின்சார இணைப்பு கொடுக்கின்றனர்.
இதில் மாட்டிய காட்டு யானை ஒன்று வியாழனன்று உயிரிழந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய விவசாயி காசி என்பவர் தலைமறைவாகி விட்டார்.போளூர் போலீசில் சரணடைந்த அவரின் மகன் வன இலாகாவினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications