For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாஜ்பாயுடன் பேசினார் முஷாரப்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

குஜராத் பூகம்பத்தில் ஏற்பட்ட சேதம் குறித்து பாகிஸ்தான் ராணுவ தளபதி முஷாரப்வெள்ளிக்கிழமை பிரதமர் வாஜ்பாயிடம் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.

இந்த மாதம் 26-ம் தேதி குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது.பல்லாயிரக்கணக்கானவர்கள் இறந்து போனார்கள். பல்லாயிரக்கணக்கானோர் வீடு,உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.

குஜராத் பூகம்பம் குறித்து தனது இரங்கலை முஷாரப் தெரிவித்தார். பாகிஸ்தான் அரசுஇரண்டு விமானங்கள் மூலமாக நிவாரண உதவிகளை அனுப்பி வைத்திருப்பதாகவும்முஷாரப் தெரிவித்தார்.

நிவாரண உதவி அனுப்பி வைத்ததற்காக பாகிஸ்தான் அரசுக்கும், மக்களுக்கும், இந்தியமக்கள் சார்பில் பிரதமர் நன்றி தெரிவித்தார். பாகிஸ்தானுடன் இந்தியா நல்லுறவைதொடர்ந்து வளர்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார். தொலைபேசி பேச்சு வார்த்தை 5நிமிட நேரம் நீடித்தது.

1999-ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தபின் முஷாரப்பும்,வாஜ்பாயும் நடத்திய முதல் பேச்சு வார்த்தை இதுதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X