நாடு முன்னேற பெண்கள் முன்னேற வேண்டும்
பாண்டிச்சேரி:
கிராமப் புறத்தில் இருக்கும் பெண்களுக்கு அரசியல் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி,சமுதாய நீதி கிடைக்காவிட்டால் நாட்டின் முன்னேற்றம் முழுமையடையாது எனபாண்டிச்சேரி துணை நிலை ஆளுனர் ரஜினி ராய் தெரிவித்துள்ளார்.
சிறு வேதிப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் வளர்ச்சிமையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழாவில் ரஜினிராய்பேசுகையில்,
இந்த ஆண்டு 1,200 பெண்களுக்கு கைவினை பொருட்கள் தயாரிப்பது, கயிறுஉற்பத்தி செய்வது உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
பெண் சிறு தொழிலாளர்களுக்கு சணல், நார் தயாரிப்பது போன்ற துறைகளில் சிறந்தபயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பாண்டிச்சேரி முதல்வர் சண்முகம் பேசுகையில்,கிராமப்புறங்களில் சுய வேலை வாய்ப்பில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கடுமையாகஉழைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
யு.என்.ஐ.